×

பட்டா வாங்க படாதபாடு படுகிறேன் வேடசந்தூர் தியாகி வேதனை

திண்டுக்கல், நவ. 26: வேடசந்தூரை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி பட்டா கோரி கலெக்டரிடம் மனு அளித்தார்.வேடசந்தூரை சேர்ந்த தியாகி கிருஷ்ணசாமி என்பவர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தற்கு வந்தார். பின்னர் அவர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்து விட்டு கூறுகையில், ‘இந்த வயோதிக காலத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஓய்வூதிய மூலம் வாழ்ந்து வருகிறேன்.வேடசந்தூர் கிராமம் பழைய நத்தம் சர்வே எண் 694ஏஏ/ 2ஏஏ1ஏ1 நம்பரில் நான் வீடு கட்டி சுமார் 65 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறேன்.  எனது வீட்டிற்கு பட்டா கேட்டு கடந்த 4 வருடத்திற்கு முன்பு திண்டுக்கல் ஆர்டிஓ மற்றும் விஏஒ அலுவலகத்திலும் மனு அளித்தேன்.
ஆனால் இதுவரை எனக்கு பட்டா வழங்கவில்லை. எனவே எனக்கு பட்டா தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Vedasandur Martyr Vedanna ,
× RELATED அய்யலூரில் இடப்பிரச்னையில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது